Date
09 Mar 2025
Expired!

சோழிங்கநல்லூர் மாவட்டக் கழகத்தின் மாதாந்திர கலந்துரையாடல் கூட்டம்

நாளை ஞாயிற்றுக்கிழமை (9.3.2025) காலை 10 மணிக்கு விடுதலை நகர் நூலகத்தில் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
பொருள் : சிதம்பரத்தில் நடந்த நமது திராவிடர் கழகத்தின் பொதுக்குழுவில் ஆசிரியர் அறிவித்த,
1) மாவட்டம் தோறும் கிளைக் கழகங்களை உருவாக்குவதும், புதிய இடங்களில் பிரச்சார கூட்டங்களை நடத்துவது என்பது பற்றியும் விரிவாக விவாதித்து முடிவு எடுக்க வேண்டும்.
2) மடிப்பாக்கம் பகுதியில் நடக்கவிருந்த கூட்டத்தை எந்தத் தேதியில் நடத்தலாம் என்றும் முடிவெடுக்க வேண்டும்.
3) இயக்க வளர்ச்சி பற்றி பகிர்ந்து கொள்ளலாம்.
ஆகவே இந்தக் கலந்துரையாடல் கூட்டத்திற்கு கழகத் தோழர்கள் அனைவரும் புதிய நண்பர்களுடன் கலந்து கொண்டு சிறப்பிக்கும்படி அன்புடன் வேண்டுகிறேன்

வேலூர் பாண்டு
தலைவர், சோழிங்கநல்லூர் மாவட்டம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *